பெட்டகம்

தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

உலகில் பல பிரைச்சனைகள் இருக்கின்றன. இவற்றில் பல எமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பிரைச்சனைகள். ஆயினும் இல்லாத பிரைச்சனைகளைக் கண்டுபிடித்து, அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகம்.

இப்படியாக ஒருவர் பதிவெழுதுவார், அவருக்கு என்னொருவர் பதில் பதிவு போடுவார். தமிழ் மணத்தில் பர பர என்று சூடுபறக்க இந்த நிகழ்வுகள் நடந்தேறும். இப்படியான் பக்கங்கள் பக்கம் நான் மறந்தும் போவதில்லை, ஆயினும் Google Readerஇல் அவ்வப்போது சில பதிவுகள் கண்களில் தட்டுப்படுவதுண்டு. ஏன் தமிழர்களே இந்த நிலமை? வலைப்பதிவது உங்ளுக்கு பொழுது போக்காக இருக்கலாம் ஆனால் இப்படியான பதிவுகளைப் பார்த்தால் தரமற்ற பதிவுகளைப் போடுவதே உங்கள் பொழுது போக்காகத் தோன்றுகின்றதே? பொழுது போக்கே தரமற்றுப் போகலாமா?
பேச்சுச் சுகந்திரம், எழுத்துச் சுகந்திரம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற துணிவு அல்லது அசட்டுத் துணிவு இன்று வலைப்பதிவர் மத்தியில்.

என் வலைப்பதிவிற்கு யார் வர முடியும் என்பதையெல்லாம் அசண்டை செய்யாமல் வயது வந்தோர் மட்டமே பார்க்க கூடிய படிமங்களைக் கூட பதிவுகளில் இட்டுவிடுகின்றீர்களே!! ஒரு எச்சரிக்கை வாக்கியம் கூட போட மாட்டீர்களா? இப்படியான ஒரு பதிவைப் பார்த்து நானே போனவாரம் அதிர்ந்து போனேன்.
சாதாரணமாக உங்கள் வலைப்பதிவிற்கு அதிகளவு நேயர்கள் வரவேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருப்பது இயல்பே. அதற்காக இப்படியான பிற்போக்குத் தனமான தரம் குறைந்த தனிமனிதத் தாக்குதல் பதிவுகளை இட்டு உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளலாமா?. ஒரு குறிப்பிட்ட வட்டத்தை தவிர வேறுயாரும் உங்கள் வலைப்பதிவிற்கு காலப் போக்கில் வராமல் விட வாய்ப்புள்ளது.
ஆரம்பகாலத்தில் எத்தனை பதிவுகள் எழுதுகின்றேன் என்பதிலேயே குறியாக இருந்தேன். பின்னர் காலப்போக்கில் உணர்ந்து கொண்டதின் படி ‘எத்தனை பதிவு எழுதுகின்றோம் என்பது முக்கியமில்லை, எத்தனை நபர்களை ஆக்கமுறையான பாதையில் எம் பதிவு மூலம் கவர்ந்திருக்கின்றோம் எனபதே.’

ஒருவர் உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகின்றாரா?அவருக்குப் பின்னூட்டமிடுங்கள், எதற்காக அதற்குப் பதில் பதிவு எழுதுகின்றீர்கள். சில வேளைகளில் உங்கள் தரப்பு வாத்த்தை அவர் பதிய மறுப்பதால் எழுதுகின்றேன் என்கிறீர்களா? அப்படியானால் எழுதிவிட்டு அத்துடன் அதை முடித்து விடுங்கள். பதிலுக்குப் பதில், இரத்தத்திற்கு இரத்தம் என்று புறப்பட்டு இவ்வாறான பதில் பதிவுகளே தமிழ் வலைப்பதிவுகளாகிவிடும்.

இவ்வாறாக பின்னூட்டமிட்டு குட்டையைக் குழப்பும் ஒரு கும்பலும் இருக்கின்றது. குறிப்பாக அனனானியாக வந்து கலக்குவார்கள். என்பதிவுகளில் அனானி மறுமொழிகளைப் பதிவதுண்டு ஆனால் அவர்களின் அர்த்தமற்ற கேள்விகளுக்குப் பதில் போடுவதில்லை. அதில் எனக்கு இஷ்டமும் இல்லை. இவர்களுக்குப் பதில் எழுதி பத்தோடு பதினொன்றாகும் எண்ணமும் எனக்கில்லை.

ஒவ்வொரு தடவையும் பதிவெழுதும் போதும் யோசித்துப் பாருங்கள், “

1.நான் எழுதும் இந்தப் பதிவு சமுதாயத்திற்கு நல்ல கருத்தைக் கொண்டு சேர்க்கின்றதா?
2.வாசகர்களை சங்கடப் படுத்தாத பதிவா?
3. தனிமனிதத் தாக்குதல் இல்லையே?
4. வார்த்தைப் பிரயோகங்கள் ஒழுங்காகவா உள்ளது?”

இந்தக் கேள்விகளுக்குச் சாதகமான் பதில் உங்களிடம் இருக்கின்றதானால் நன்று உங்கள் பதிவைப் பதிந்து விடுங்கள். இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்! தயவு செய்து வேண்டாம்.

மற்றவர்கள் என்ன குப்பைப் பதிவு வேண்டுமானாலும் போடட்டும். ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அப்படியான் பதிவுகளைப் வாசித்து அதற்கு பதில் எழுதப் போய் வீணான ஒரு குழப்பத்தில் மாட்டிக் கொள்ளாதீர்.

அண்மையில் ஒரு தமிழ் வலைப்பதிவருடன் அரட்டை அடிக்கும் போது தன் பதிவுகள் இப்போது தமிழ் மணத்தில் திரட்டப்படுவதில்லை என்று கூறினார். ரொம்பவுமே வருத்தப்பட்டுப் பேசினார். இப்ப கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? வெள்ளம் தலைக்கு மேலாகப் போய் விட்டதே?

தமிழ் மணம் காரங்க பாவம் எத்தனைப் பதிவுகளை மொத்தமாகக் கண்காணிப்பது? கணிமை வலைப்பதிவில் பரிந்துரைத்த படி தமிழ் மணத்திற்கு பதிவைச் சேர்க்கும் போது, அதன் உள்ளடக்கத்தைப் பற்றியும் எழுத்தாளரின் உள்ளீட்டை வாங்கினால் வகைப்படுத்த வசதியாக இருக்கும். தமிழ் மண முகப்பில் திறந்த உடனேயே இப்படியான தரமற்ற பதிவுகளைக் காணத் தேவலையில்லை.

எழுதுங்கள் அது உங்கள் சுகந்திரம் ஆனால் எதையும் எழுதலாம் என்ற ஆணவத்தில் கண்ட கண்ட குப்பைகளை எழுதி உங்கள் வலைப்பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர். இது ஒரு பணிவான வேண்டுகோள்.

நன்றி

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

4 comments to தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

  • பிறைநதிபுறத்தான்

    சமுதாய பொறுப்புணர்ச்சி நிறைந்த பதிவராக உந்துதலும் – அவ்வாறு செயல்பட்டால் ஏற்படும் நன்மைகளையும் பதிவாக தந்ததற்கு நன்றி மயூரேசன் அய்யா அவர்களே!

  • செறிவான பொறுப்புணர்வுடன் கூடிய உங்கள் பதிவு இப்பொழுதைய கட்டாயத் தேவை. நிச்சயம் பதிவர்கள் மனத்தில் சலனத்தை ஏற்படுத்தும். பாராட்டுக்கள்.

  • நன்றி முருகானந்தன் அவர்களே, பிறைநதிபுறத்தான்

  • ஒரு கட்டத்தில் தனி மனித தாக்குதல் ரெம்ப அதிகமாக இருந்தது, இப்போது கொஞ்சம் பரவாயில்லை என நினைக்கிறேன்.

    எல்லோராலும் சமுதாய சிந்தனை மிக்க பதிவுகளை எழுத முடியாது, கீழ்தரமான தனிமனித/சமுதாய தாக்குதல் இல்லாமல் இருந்தாலே போதுமானது!!

Leave a Reply

 

 

 

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>