பெட்டகம்

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ;)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

PayPal ஐ தடை செய்த இந்தியா

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் முறையும் இதுதான் என்று கூறினால் மிகையாகாது.

இந்த தடைமூலம் இணையத்தில் பேபால் பாவிக்கும் இந்தியர்கள் பெரும் பிரைச்சனைகளை அடையப் போகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பேபால் முழுமையான சேவையை வழங்கவில்லை. இலங்கை பேபால் பயனர்கள் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியுண்டு ஆனால் அங்கிருந்து பேபால் பணத்தை பெறும் வசதியில்லை. ஆயினும் இருபக்க கொடுக்கல் வாங்கல் வசதி இந்திய பேபால் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்படித் தக்கதாகும்.

எது எவ்வாறிகினும் பேபால் தம்மை பதிவு செய்துகொண்டால் மீள இந்தியாவில் இயங்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

16 வயதே நிரம்பிய Twitter புலி

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.

இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.

OMGFacts இலச்சினை

16 வயது தம்பி போட்ட சில ட்விட்டர் சாம்பிள்களைக் கீழே பாருங்கள்

All swans in England are the property of the queen or king.

In 1770, a bill proposing that women using makeup should be punished for witchcraft was put forward to the British Parliament.

Orgies were originally religious events. They were originally offerings to the gods.

இவன் எழுதிய சில தனி நபர்கள் பற்றிய ட்விட்கள் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

ABC செய்திகளில் இது பற்றிய செய்தி.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

கூகிள் - சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா??

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.

  1. தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
  2. கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கூகிள் கடந்த டிசம்பர் மாதம் சீன மனித உரிமைக்காகப் போராடும் தனி நபர்களின் மின்னஞ்சல் கணக்குகளை சீன Hackers கைப்பற்ற முயன்றதாகத் தெரிவித்துள்ளது. இதன் விழைவாக தமது செயற்பாட்டை சீனாவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டாலும் அதற்கும் எதிர்பார்ப்பதாக கூகிள் அறிவித்தது.

பின்னர் டிசம்பர் 15ம் திகதி இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தன் பங்கிற்கு சீனாவைச் சாடினார். இந்திய அரசின் கணனிகளை சீன ஹக்கர்கள் PDF கோப்புகள் மூலம் Trojan முறையில் ஹக் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

இரண்டு குற்றச்சாட்டுகளையும் சீன அரசு வழமைபோல மறுத்திருந்தது. ஆனாலும் பின்னர் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக அறியக் கிடைக்கின்றது. கூகிள் ஒரு அமெரிக்க கம்பனி என்பதாலும் அமெரிக்க அரசுடன் இணைந்து கூகிள் நடவடிக்கை எடுத்த காரணத்தாலும் அமெரிக்கா இவ் விடையம் சம்பந்தமாக சீனாவுடன் மிக கடுமையான தொனியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகின்றது.

இது சம்பந்தமாக ஏற்கனவே ஹில்லாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

“It is also the case that we take this matter very seriously and, as Secretary of State Hillary Clinton said last week

இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்தாலும் இதற்கு சரியான பதிலைத் தரக்கூடிய பொறுப்பு சீனாவிடமே உள்ளது என்று அமெரிக்கா விடாப்பிடியாக உள்ளது. தொடர்ந்து அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருகின்றது. இதன் விபரங்கள் வரும் வாரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

கூகிளின் Nexus One தொலைபேசி

இதேவேளை தனது புதிய இரண்டு வகை கையடக்க தொலைபேசியை சீனாவில் வெளியிட்டு வைப்பதை கூகிள் தள்ளிவைத்துள்ளது. கூகிளின் எதிர்காலம் சீனாவில் என்ன வென்று தெரியாத இந்த நிலையில் பெரும் செலவில் வெளியிட்டுவைப்பதை கூகிள் விரும்பாமல் போனமை அதிசயம் இல்லை. சீனாவில் 700 மில்லியன் கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்கள் இருப்பதையும், சீனா இந்த துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றது என்பது இங்கே குறிப்பிடப் படவேண்டிய விடையம்.

இந்த பிரைச்சனையில் கூகிளுக்கு யாகூ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை மைக்ரோசாப்ட் இவ்வாறு கூகிள் வெளியேறுவதை அவ்வளவு நல்ல விடையமாகப் பார்க்கவில்லை என்றும் தொழில் நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் கம்பனிகளின் உட்கட்டுமானங்களை கைப்பற்ற ஹக்கர்ஸ் முயல்வது வழமைதான் என்று கூறியுள்ளது.

இதே வேளை சீனாவின் பிரபலமான தேடல் இயந்திர சேவை வழங்குனர் Baidu அமெரிக்க டொமைன் பதிவு செய்யும் கம்பனி ( Register.com Inc) மீது வழக்கைத் தொடுத்துள்ளது. சனவரி 12ம் திகதி இராணிய இராணுவம் என்ற பெயரில் இவர்களின் தளத்திற்கு வரும் பயனர்களை சில ஹக்கர்ஸ் திசை திருப்பி வேறு தளத்திற்கு அனுப்பினர். இவ்வாறு அனுப்ப Register.com தளத்தின் கவனையீனமே காரணம் என்று பாய்டு அறிவித்துள்ளது. Baidu விடம் சீனாவின் தேடல் பொறி சந்தையின் 60 வீதம் உள்ளது. சுமார் 30 வீதத்தையே கூகிள் தன் வசம் வைத்துள்ளது. ஆனாலும் கூகிள் வேகமாக ஆண்டுதோறும் வளர்ந்து வந்துள்ளமையையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எது என்ன ஆனாலும் கூகிளின் பங்குகள் நல்ல நிலையிலேயே பங்குச் சந்தையில் உள்ளனவாம். தொடர்ந்தும் விலை சரியாமல் உள்ளமையுடன் 1.6% பங்கு விலைகள் கூடியுள்ளனவாம்.

உலகுடன் சேர்ந்து ஓட தயங்கும் சீனாவிற்கு எதிர் காலம் அவ்வளவாக சிறப்பாக அமையும் என்று தெரியவில்லை. தகவல்களைப் பெறுவது ஒரு மனிதனில் தனிமனித உரிமை. இதைக்கூட ஏற்க மறுக்கும் சீனாவை என்ன வென்பது?? அவதார் திரைப்படம் மூலம் மக்கள் தூண்டப்படலாம் என்று அந்த திரைப்படங்களையே தூக்கிய மகா மக்களாட்சி நடக்கிறது சீனாவில்.

மக்களை ஏமாற்றி மக்களாட்சி நடத்துவதாக பீற்றும் எந்த அரசும் நிலைத்து நீடித்ததாக சரித்திரம் இல்லை. சீனப் பேரரசு இதை உணரப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இணைந்து இப்படியான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எதிர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஒரு மின்னஞ்சலில் PDF கோப்பாக இணைக்கப்பட்டிருந்த ட்ரோஜன் வகை வைரசு ஒன்றைக் கண்டுபிடித்ததாகவும் அந்த PDF கோப்பு மூலம் தமது கணனிகளைக் கைப்பற்று முயன்றதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

இப்படியாக இந்திய கணனிகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், சீனாவில் ஹக் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் சீனா பதிலுக்கு அறிவித்துள்ளது. சீனாவே ஹக்கிக்கிற்கு அடிக்கடி இலக்காகுவதாகவும் சீனா தெரிவுத்துள்ளது.

1962ல் நடந்த இந்தோ சீனா யுத்தத்தில் இந்திய மொக்கையடி வாங்கியபின்னர் அண்மைய காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பகை மெல்ல மெல்ல மூண்டுவருகின்றது. அண்மையில் தனது இரண்டு இராணுவ டிவிசன்களை இந்தியா நிறுத்தியுள்ளதுடன் ஜெட்விமானங்களையும் கிழக்கு எல்லைக்கு இந்தியா நகர்த்தியுள்ளது.

ஒரு யுத்தம் மூண்டால் இந்தியாவிற்கு உதவி செய்யக்கூடிய அமெரிக்க தலமையிலான மேற்குலகமும் பொருளாதார நெருக்கடியில் உழல்கின்றவேளையில் இந்தியாவை வாட்ட சீனாவிற்கு இது மிகப்பெரிய பொருத்தமான தருணம் என்பதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு எழுதிய பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து அடுத்த பதிவும் எழுதியாகிவிட்டது. கூகிள் – சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா?? என்ற பதிவையும் வாசித்துப் பயன்பெறுங்கள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

தைப்பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் இலங்கை வென்றது

இன்று நீண்ட நாட்களின் பின்னர் கிரிக்கட் ஆட்டத்தை ஆபீஸில் ஆணிபுடுங்கும் நேரத்தில் இருந்து பார்த்தேன். மட மட என விக்கட்டுளைச் சாய்த்த இலங்கை இந்தியாவை 200 ஆட்டங்களுக்கு முன்னரே சுருட்டும் என்று எதிர்பாரத்தாலும் எதிர்பாராவண்ணம் றைனா இலங்கைக்கு பால் காய்ச்சினார்.

ஒருவாறாக 100 எடுத்து றைனா வெளியேற மிஞ்சியிருந்தவர்கள் சுமார் 245 வரை இழுத்து இழுத்து சென்றுவிட்டார்கள். இலங்கை துடுப்பாட்டம் சொதப்பக்கூடியது என்பதால் நான் அவளவாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை. ஆயினும் காங்கோன் இலங்கை அணி வெல்லும் என்றும் சங்க்காரவை புகழ்ந்தும் ட்விட்டரில் ட்விட்டிக்கொண்டிருந்தார்.

நல்லவிதமாக சங்கா மற்றும் மஹேல சேர்ந்து இலங்கையை வெற்றைவாகை சூட வைத்தனர். இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி ;)

இலங்கை தோற்றதில் கிளு கிளுப்பான சிலர் வீதியில் இனிப்பு வழங்கச் சென்று அடிவாங்கியதாக அரசல் புரசலாக ட்விட்டரில் செய்திகள் அடிபடுகின்றது.

பொங்கல் சிறப்பு அவதார்

இன்று இலங்கையில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களும் தமிழகத்தில் இருக்கும் கருனாநிதி பக்தர்களுக்கு புத்தாண்டுவாழத்துக்களையும் சொல்லிக்கொள்கின்றோம்.

புது வருடம் புது களங்கள் பல கண்டு வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பி.கு: மேலே உள்ள பொங்கல் சிறப்புப் பட உபயம் யாகூ அவதார்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்

பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மிகவும் சீற்றம் அடைந்துள்ள கூகிள் நிறுவனம் தன் சீன அலுவலகத்தை மூட வேண்டி வந்தாலும் அதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

2006இல் சீனாவில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த கூகிள் 10 மில்லியன் பயனர்களில் இருந்து 340 மில்லியன் பயனர்களை தன்பால் மிக குறுகிய காலத்தில் ஈர்த்துக்கொண்டது. சீன அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி சில தகவல்களை தேடல் முடிவுகளில் காட்டாமல் கூகிள் கவனித்துக் கொண்டது.

ஆயினும் டிசம்பர் நடுப் பகுதியில் நடந்த நிகழ்வுகள் நிலைமையைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இது பற்றி கூகிள் கூறுகையில்

we have evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists. Based on our investigation to date we believe their attack did not achieve that objective. Only two Gmail accounts appear to have been accessed, and that activity was limited to account information (such as the date the account was created) and subject line, rather than the content of emails themselves.

கூகிளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீன ஹக்கர்களால் ஜிமெயில் கணக்குகளை அணுக முடியாமல் போய்விட்டாலும் இதே மாதிரியான தாக்குதல் ஏனைய நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டதாக கூகிள் கூறுகின்றது.

this attack was not just on Google. As part of our investigation we have discovered that at least twenty other large companies from a wide range of businesses–including the Internet, finance, technology, media and chemical sectors–have been similarly targeted.

பெரும் தர்மசங்கடத்தை தோற்றுவித்த இந்த நிகழ்வில் சீன அரசின் நேரடிப் பங்கு இருக்கின்றதா என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்ல கூகிள் மறுத்துவிட்டது.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் பழக்கம் உடைய அமெரிக்காவும் தன் பாட்டிற்கு இந்த நிகழ்வு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதுடன் இது பற்றி சீன அரசிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார் ஹல்லாரி கிளிண்டன்.

இந்த நிகழ்வுகளின் பின்னர் கூகிள் இனிமேல் சீனா கூகிள் நிறுவனம் தணிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது எனவும் இது சம்பந்தமாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பேச்சு வார்தை முடிவில் தமது அலுவலகத்தையும் மூடிக்கொண்டு புறபட நேரிட்டாலும் அதற்கும் தயாராக இருப்பதான தோறணையில் கூகிள் கருத்து வெளியிட்டுள்ளது.

“If, as seems likely, the government refuses to allow it to operate an uncensored service, then Google will pull out.

தகவல் சுதந்திரம் எனபது ஒவ்வொரு மனிதனிற்கும் இருக்கவேண்டியது. யாரும் சொல்பவற்றை மட்டுமே நாங்கள் நம்பவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். சீன அரசும் ஒரு மக்கள் அரசு இப்படியான செயல்களில் இறங்கி மக்கள் எதிர்ப்பைச் சம்பாதிக்குமா?

இவ்விடயம் சம்பந்தமாக எழுதிய புதிய தகவல்களைக் கொண்ட பின்வரும் பதிவுகளையும் காணவும்.

  1. சீனாவை கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீண்டியது
  2. தொடரும் சீனா – கூகிள் பனி யுத்தம்

P.S: சீன அரசு பேசாமல் Cowboy மதுவை நாடியிருந்தால் பிஷ்ஷிங் முறையில் ஹக் செய்து கொடுத்திருப்பார். ;)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

வேலையில்லா திண்டாட்டத்தில் அலறும் அமெரிக்கா

உலக நிதி நெருக்கடி காரணமாக உலகமெங்கும் பல மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் கூட இந்த நிதி நெருக்கடியில் நொந்து போயின. இதில் என்னவோ அதிகமாக அடிவாங்கியது அமெரிக்காதான்.

2007ல் ஆரம்பித்த இந்த நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் இதுவரை 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இதில் 4.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிதிநெருக்கடி உச்சம் கொடுத்த 2009ம் ஆண்டில் இழக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி ஓய்ந்துவிட்டது எல்லாம் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்புகின்றது என்று ஒபாமா ஒப்பாரி வைக்கும் நேரத்தில் கடந்த டிசம்பர் மாதக்காலப்பகுதியில் மீண்டும் 85,000 வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோல நவம்பர் மாதக்காலப்பகுதியில் 11,000 வேலைகள் இழக்கப்படலாம் என்று அமெரிக்க அலுவலர்கள் எதிர்பார்த்தாலும் எதிர் பார்த்ததைவிட 4000 வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இழக்கப்பட்டுள்ளன. எது என்னவானாலும் வேலைவாய்ப்பில்லா வீதத்தை 10% பேணுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. இது இந்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கும் என்றும் இது உலக யுத்தம் II இன் பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாடமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கைப் பார்க்கும் போது எமக்கே பீதி ஏற்படும்போது அமெரிக்கா பீதியடைவதில் வியப்பேதும் இல்லை. கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் இப்படியான வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் நிலவியதில்லையாம். ஒபாமாவின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சோதனையாகவும், தலையிடியாகவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் திகழ்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா தனது புதிய பொருளாதார மீட்சி திட்டத்தை அறிவித்தார். அதன்படி சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.

ஒபாமா அமெரிக்க வங்கிகளை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு பணம் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டுள்ளார். அமெரிக்க வங்கிகளுக்கு ஒபாமா நிர்வாகம் சுமார் $700 பில்லயன் அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. இதனால் சதாரண மக்கள் கடும் கடுப்பாகவுள்ளனர். ஆயினும் ஒபாமா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 1930ன் பின்னர் அமெரிக்க எதிர்கொள்ளும் இந்த மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்த கடன் உதவி அவசியமாகின்றது என்று அறிவித்தார்.

முன்பு தான் செய்த உதவிக்கு பரோபகாரம் தேடும் நடவடிக்கையாகவே ஒபாமா இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார் என எண்ணலாம்.

சில அமெரிக்க வங்கிகள் அரசு கொடுத்த கடன்களை நன்றியுடன் திருப்பி வழங்கிய நிகழ்வுகளும் நடந்தேறத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அமெரிக்க அரசு கொடுத்த 20பில்லயன் அமெரிக்க டாலர் கடன் தொகையை சிட்டி குரூப் எதிர்பார்த்த காலத்தை விட குறுகிய காலத்தில் மீள அரசிற்கு வழங்கியுள்ளது. இது வங்கித்துறை நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருவதைக் காட்டுவதாக இருப்பினும், வங்கிகள் அரச தலையீட்டை அவ்வளவாக விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் என்று கேட்டால் எனக்கும் சத்தியமாக பதில் தெரியாது. ஆயினும் 2012 வரை கூட இதன் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல நிறுவனங்கள் புதிதாக வேலையாட்களைச் சேர்க்க கூடிய கொள்ளளவு இருந்தாலும் பயம் காரணமாக சேர்ப்பதில்லை.

இது இப்படியென்றால் நம்மூரில் உலக நிதி நெருக்கடியை காட்டி கொள்ளயடிக்கும் நிறுவனங்கள் அதிகம். மிகுந்த இலாபத்தில் இயங்கினாலும் உலக நிதி நெருக்கடியைக்காட்டி ஊழியரிடம் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் மற்றும் சம்பள உயர்வு வழங்காமை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றன. மக்கள் நலம் உள்ள அரசு தலையிட்டால் அன்றி இப்பிரைச்சனைகள் தீர வழியிருப்பதாகத் தெரியவில்லை.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Google Wave ஐ இணைத்து ஒரு பதிவு

வணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள்.


பி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் வேண்டுமென்றால் அறியத்தாருங்கள்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!