பெட்டகம்

நான் மகான் அல்ல – விமர்சனம்

கார்த்தி & கஜல் அகர்வால்

காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.

இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.

கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த அதை கார்த்தியின் தகப்பனார் பார்த்துவிடுகின்றார்.

பொடியள் பட்டாளம் கொலைக்குச் சாட்சியான கார்த்தியின் தந்தையை போட்டுத்தள்ள முயல்கின்றார்கள். போட்டுத் தள்ளினார்களா?? கார்த்தி அந்த பாவிகளை என்ன செய்தார்?? பொலிஸ் என்ன செய்தது?? என்பவற்றிற்கு விடை திருட்டு விசிடியிலோ அல்லது அருகில் உள்ள திரையரங்கிலோ கிடைக்கலாம்.

இயக்குனர் சுசீந்திரன் புதிய கள்ளை பழைய மொந்தையில் தந்துள்ளார். ஆனாலும் படம் மோசமில்லை. படம் ஆரம்பித்து முடிக்கும் வரை விறு விறு என்று கதை நகர்கின்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுப்பேற்றுகின்றது. முடிவு அடியேனுக்குப் பிடித்திருந்ததே.

கஜல் அகர்வால் படத்தில் என்ன செய்கின்றார் என்று யாராவது சொன்னால் ஒரு இலட்சம் பரிசு வழங்கப்படும். சும்மா ஏதோ ஒரு கதாநாயகி தேவை என்பதற்காக வந்து போகின்றார். சில சிலுமிசங்கள் மட்டுமே கார்த்தியுடன் செய்து விட்டு மறைந்து போய்விடுகின்றார்.

யுவனின் இசை இலயிக்கின்றது. கார்த்தி கோபம் கொள்ளும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ராக் இசை அபாரம். அதைவிட “இறகைப் போல” பாடல் மனதில் நச் என்று பதிந்து விடுகின்றது.

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

காட்சியமைப்புகள், சண்டைக் காட்சிகளும் அருமை. மொத்தத்தில் கார்த்தி அண்ணனை விஞ்சப்போகும் பந்தையக் குதிரை. சூரியா உங்கள் கதிரையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்

அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது <<மேலும்>> என்று ஒரு இணைப்பு இருக்கும். அதைக் கிளிக்கி மிகுதிச் செய்தியை அவர்களின் தளத்தில் வாசிக்க வேண்டும்.

2. இரண்டாம் இரகம் ரொம்பக் கேவலம். முன்பு கூறியபடி ஒரு செய்தியிருக்கும். மேலும் இணைப்பைக் கிளிக்கினால் ஒரு தளத்தின் முகப்பிற்கு எடுத்துச் செல்லும். அதாவது அந்த தளத்தின் சரியான செய்திக்கு இணைப்புத் தராமல் தளத்தின் ஹோம் பக்கத்திற்கு எங்களை எடுத்துச் செல்லும். தளத்தின் முகப்புப் பக்கதிற்கான வாகர் வரவை அதிகரிக்க ஒரு கேவலமான முயற்சி

தமிழ் மணத்திற்கு இது பற்றி அறிவித்தேன் ஆனாலும் அவர்களிற்கு இதுகளுக்கு நேரம் இல்லை போலும். இவ்வகையான தளங்களை இனம் கண்டி நீக்கி வாசகர்களின் வாசகப் பயனத்தை இலகுவாக்க தமிழ் மணம் நடவடிக்கை எடுக்க கோருகின்றேன்.

E.g

  1. ராஜ் தாக்ரேவை தாக்கும் மண்ணாங்கட்டி
  2. பார்த்தீபனின் வித்தகன்
  3. நமி நமி நமீதாஆஆஆஆ

சொல்லுறத சொல்லியாச்சு இனி தமிழ் மணமாச்சு தமிழ் செய்தித் தளங்களாச்சு.

கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல்

கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும் தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே அறிவித்துள்ளது.

படிமுறை மிக இலகுவானது.

  1. http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க
  2. ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத் தெரிவுசெய்க.

அனைத்தும் சரி. இந்த புதிய பிண்ணனி போடும் வசதி உங்களுக்குப் பிடித்துள்ளது என்று நம்புகின்றேன்.

சுறா ரியாக்சன் - இணையத்தில் விமர்சனங்கள்

ட்விட்டர்

சுறா விசய்

@webalfee naan avan illai – சமாதானமா போக புறா இல்ல சுறா vs சமாதானமா போக சாமி இல்ல ஸ் வாமி.. http://bit.ly/aOznOS

@TBCD வசனம் பேசுவதில் ஒரு ங்கொன்னியா மாதிரி வேற குரலில் பேசுவாரே, அதை படம் முழுக்க செஞ்சி நம்மை சோதிக்கிறார் “சுறா”

@dynobuoy @penathal சுறா மேரி… எங்க பேச்சை நாங்களே நோ லிசனிங்! அதுக்குதான் ஆயிரக்கணக்கான மாக்காள் இருக்காங்களே?

scanman #சுறா படு கேவலம். தயவு செய்து காசையும் நேரத்தையும் வீனாக்காதேன்னு நண்பன் ஒருவன் கோவையிலிருந்து கூப்பிட்டு சொன்னான்.

@TBCD @nandhakumar மிகவும் மோசமென்று சொல்ல முடியாது. சுறா தப்பிக்கும் !

@nattanu சுறா செம கடி கடிக்குதாமே? 20 $ ஆப்பா இன்னிக்கு நைட் :(

nandhakumar சுறா போய் விட்டு வந்து 20 நிமிடத்தில் வெளி வந்து விட்டேன். இவ்வளவு மொக்கையாக விஜய் படம் இது வரை வந்ததில்லை என்றே சொல்லலாம்

@dakannan கதைதான் ரீமேக் என்றால் பாடல்களுமா என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது – “சுறா” : திரை விமர்சனம்

@subankan சுறா விமர்சனங்களோட தொல்லை தாங்காம தமிழ்மணமே ஸ்டக்கிடுச்சுடா #தளபதி வாழ்க

@nirujah டிஷானும் அவுட்…! சுறா பாக்கிறதை விட சிறிகட் பாக்கலாம் போல இருக்கு ;)

மேலும் ட்வடிட்டர் நச் காண…

பீட்டர் தளங்கள்

http://www.tamilstudios.com
He sings and dances with elan, wears stylish costumes to make a point to his colleagues and audiences alike and, as expected of any Tamil super-hero, fights every evil-doer in the vicinity with single-handed panache.

தமிழ் விமர்சனங்கள்

அகசியம்

தமானா சகிதம் விஜய்

கிராமத்து ஒவ்வொரு வீடுகளின் பிள்ளையாகவும் திகழும் விஜய், அவர்களின் கஸ்டங்களைப் போக்கிய பின்பே திருமணம் செய்வது என்ற ஐடியாவில் இருக்கின்றார். (அது ஒரு வசனத்தோட சரி). இந்தவேளை ஹீரோயின் அறிமுகம். தன் நாய்க்குட்டி இறந்ததற்காக கடலிலுள் தற்கொலை செய்யவரும் தமன்னாவை விஜய் காப்பாற்றுகின்றார். அதன் பின் விஜயின் நல்ல குணங்களை பார்த்து காதலிக்கின்றார். ஆடல், பாடல் கொண்டாட்டம் ஒருபுறம்.

சாத்தூர் மாக்கான்
எப்படியாப்பட்ட பெரிய நடிகரும், ‘இது மக்களுக்குப் பிடிக்குமா… நிராகரித்து விடுவார்களோ’ என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.

கோழிப் பையன்
மீனவ குப்பத்தை காலிசெய்து அதில் தீம் பார்க் ஒன்றை கட்ட நினைக்கும் ‘ரவுடி’ மந்திரி குப்பத்தை தீவைத்து கொளுத்த அதில் ஹீரோவை சிக்கவைத்து இறந்துவிட்டதாக நம்பவைத்து குப்பத்து மக்களை வேறிடம் சென்று தங்க ஏற்பாடு செய்யும் வேளையில் தீயிலிருந்து ஹீரோ வெளிவருகிறார்.

“எம்மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே.”

தமயந்தி
இம‌ய‌ம‌லைல‌ ரூம் போட்டா ம‌ட்டுமே இதெல்லாம் யோசிக்க‌வே வ‌ரும்.அப்புற‌ம் த‌ம‌ன்னா..என்ன‌ ஒரு நிற‌ம். ப‌ட் அவ‌ங்க‌ வாய் ம‌ட்டும் ஏன் இந்த‌ காதுக்கும் அந்த‌ காதுக்கும் வ‌ரை பால‌ம் போடுதுனு ச‌த்திய‌மா புரிய‌ல‌.க‌ட‌வுள்ட்ட‌ ச‌த்திய‌மா கேக்க‌ வேண்டிய‌ கேள்வி.ம‌ணிச‌ர்மா இசைல‌ “த‌ஞ்சாவூர் ஜில்லாகாரி ” பாட்டு அதிர‌ வைக்குது.

சாளரம்
சட்டை பட்டனை போடாமல் திறந்த மார்போடு அதே திருமலை விஜய். ஆனால் இதுவரை போடாத கலர்களில் இருக்கின்றன அவர் அணியும் சட்டைகள். படத்தின் இரண்டாம் வித்தியாசம் அவரின் வீடு. கடற்கரையோரம் இருக்கிறது. இதுவரை எந்த விஜய் படத்திலும் இப்படி இருந்ததில்லை. அந்த குப்பத்தில் ஒரு போட்டி. யார் கடலின் நடுவே சென்று நிறைய மீன் பிடித்து வருகிறார்கள் என்ற போட்டி. வழக்கமாய் ரன்னிங் ரேஸ், கார் ரேஸ் என்றுதான் இருக்கும். ஆனால் இதில் வித்தியாசமாய் கடலில் ஒரு போட்டி. வழக்கம் போல் விஜய்தான் ஜெயிக்கிறார். ஜெயித்தவுடன் பாடல்.

Shockan
விஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்… வழக்கம் போல சண்டை போடுகிறார்… ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்… !

கூகிள் பஸ்

பவானந்தன்
சுறா படம் வெளிவருவதற்கு முன்னர் வரை ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து படங்களில் நடித்துவந்த வடிவேலு சுறா படத்தின் முதலாவது காட்சிக்குப்பிறகு படங்களிலிருந்து தடாலடியாக நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு விஜய் போடப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்களுக்கு பஸ்சுடன் இணைந்திருங்கள்..:p

பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் முடியும் வரை நாயகன் ஓடு ஓடு என்று ஓடுவார் அவர் கூட நாயகியும் ஓடுவார். வில்லனும் விதியும் விடாமல் துரத்தும். அவ்வகையான திரைப்படங்களை நாம் இது வரை பார்த்திருக்கின்றோம். அவ்வகையைச் சார்த்த திரைப்படம்தான் இந்த திரைப்படம்.

கார்த்தி பொறுப்பற்ற ஒரு இளைஞன். வாழ்வில் வித்தியாசமாக எதையும் முயற்சித்து காலம் கடத்துபவன். விதியின் செயலால் கட்டாயத் திருமணத்தில் இருந்து தமனாவைக் காப்பாற்றும் ஒரு பொறுப்பில் வீழ்கின்றான்.

கிடைத்த இரவல் காரில் தமானாவை ஏற்றிக் கொண்டு ஊர் ஊராக ஓடுவதும் பின்னால் இரண்டு ரவுடிக் கும்பல் துரத்துவதுமாகக் கதை. இடையில் சொல்ல நினைத்தும் சொல்லாமல் தவிக்கும் ஒரு காதல் வேற.

திரைப்படத்தில் என்ன சிறப்பு என்று கேட்டீர்களானால் என்னைப் பொறுத்தவரையில் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்கள். சண்டைக் காட்சியில் வரும் இலக்ரோனிக் கிட்டார் இசை எங்கள் மீசையையும் முறுக்க வைக்கின்றது. என் காதல் சொல்ல நேரம் இல்லை மற்றும் துளி துளி மழைத்துளியாய் வந்தாளே பாடல்கள் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. மற்றய பாடல்கள் ஒட்டவில்லை.

லொஜிக் இல்லாத மொக்கை சண்டைகளுக்கு குறைவில்லை. இருபது முப்பது பேரை கார்த்தி ஒத்தையாளாக அடித்து வீழ்த்தும் போது.. ஷப்பா… ஆரம்பிச்சுட்டாங்கையா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் தியட்டரில் அந்த சண்டைக் காட்சிகளை விசிலடிச்சு இரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதே உண்மை.

கார்த்தி நடிப்பு ஓ.கே. தமானா நடிப்பு என்று ஒன்றும் இல்லை ஆனால் கியூட்டா இருந்தாங்க. என்றாலும் கார்த்திதான் பெஸ்ட். ;)

கார்த்தியின் நடிப்பு ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பருத்தி வீரன் போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது சுமார்தான். கார்த்தி சில இடங்களில் சூர்யாவையும் சில இடங்களில் சிவ குமாரையும் ஞாபகப் படுத்துகின்றார். இன்னும் சிறப்பாக எதிர் வரும் படங்களில் நடிப்பார் என்று நம்பலாம்.

படம் சூப்பரா இல்லை மொக்கையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இரண்டும் இல்லை என்பதுதான். ஒரு தடவை தியட்டரில் பார்த்து இரசிக்க கூடிய திரைப்படம். திருட்டு வீசீடியில் பார்ப்பதற்கு இந்த திரைப்படத்தில் ஒன்றும் இல்லை.

அது சரி எதற்காக இந்த திரைப்படத்திற்கு “பையா” என்று பெயர் வைத்தனர்??? பேசாமல் பெங்களூரில் இருந்து மும்பாய் வரை என்று ஒரு பெயர் வைத்திருக்கலாம்.  வர வர லிங்குசாமியிடம் சரக்கு குறைந்து போகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

செல் பேசியில் தமிழ் மொழி

இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். தமிழ் மொழியை ஏதோ கண்டும் கணாதது போலத்தான்.

நொக்கியா 2730யில் தமிழில் ஜிமெயில்

குறிப்பாக விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் ஆதரவு இருந்தாலும் விலை கூடிய செல்பேசிகளில் தமிழ் ஆதரவு இருப்பதில்லை. இந்த நிலையில் செல்பேசி உலாவியில் தமிழ் தளங்களைப் பார்த்தால் அனைத்தும் பெட்டி பெட்டிகளாகத் தெரியும்.

இந்த பிரைச்சனையில் இருந்து விடுபட டிவிஸ் எழுதிய பதிவைப் படியுங்கள். ஒபெரா மினி எனும் உலாவி மூலம் தமிழ் தளங்களைப் படிக்க கூடிய வசதியுள்ளது. ஆனாலும் இதன் மூலம் தமிழில் உள்ளிட முடியாது. ஒபேரா மினி இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கின்றது என்பதைக் குறிப்படவேண்டும்.

தமிழில் உள்ளிட வேண்டுமானால் தொலைபேசியில் தமிழ் உள்ளிடுவதற்கான ஆதரவு இருக்கவேண்டும். பெரும் பாலான தொலைபேசிகளில் இந்த வசதி இருப்பதில்லை.

நான் அறிந்த வரையில் இந்திய, இலங்கை சந்தைகளுக்காகச் செய்யப்பட்ட தொலைபேசிகளில் தமிழ் உள்ளீட்டு ஆதரவு இருக்கும். ஆனாலும் பெரும்பாலான தொலைபேசிகளில் இது இருப்பதில்லை. இலங்கையில் வெளியாகும் தமிழ் ஆதரவு செல் பேசிகளில் கீ-பாட் பெரும்பாலும் சிங்களத்திலேயே இருக்கும். ஆனாலும் தமிழகத்தில் கீ-பாட்டையும் தமிழில் செய்து வைக்கின்றார்கள்.

சில வருடங்களிற்கு முன்னமே தமிழிற்கு ஒரு செல்பேசி தளக்கோலம் தேவை என்று ரவி கூறியிருந்தார். அண்மையில் ரவி வாங்கிய நொக்கிய 5310 இல் தமிழ் கீ பாட் மற்றும் தமிழ் இடைமுகம் இருப்பதாகக் கூறியிருந்தார். நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்றும் ரவி ஒரு பதிவிட்டுள்ளார். அவ்வகையான தொலைபேசிகள் மூலம் இணையத்தில் உலாவுவதுடன் தமிழ் மொழியில் உள்ளிடவும் முடியும். இயல்பிருப்பாக இந்த தொலைபேசிகளில் தமிழ் மொழி ஆதரவு இருப்பதினால் SMS, Email போன்றவற்றையும் தங்குதடையின்றி தமிழ் மொழியில் பார்க்கலாம்.

நொக்கியா 2730

சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நொக்கியா 2730 எனும் தொலைபேசியை சுமார் 10,000 ரூபாவிற்கு (100 USD) வாங்கினேன். இந்த தொலைபேசியின் சிறப்பு என்னவெனில் 3G வசதியுள்ளமை. 3G வீடியோ அழைப்புகளை எடுக்க முடியாவிட்டாலும் WCDMA வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும். அத்துடன் கணனியுடன் இணைத்தால் சாதாரண அகலப்பட்டை இணைப்பு வேகத்தில் இணையத்தில் உலாவ முடியும்.

இந்த நொக்கியா 2730 இல் தமிழ்,  சிங்களம், ஹிந்தி, வங்க மொழி ஆகிய மொழிகளுக்கு ஆதரவு வழங்ப்படுகின்றது. இதில் இயல்பிருப்பாகவே MSN Messenger, Opera Mini, Email Client போன்றவை இருக்கின்றமை சிறப்பியல்பு.

Gmail, Hotmail போன்றவற்றை செல் பேசியிலேயே வாசிக்க கூடியதாகவும் தமிழிலேயே பதில் போடக் கூடியதாகவும் இருப்பது இரட்டை மகிழ்ச்சி. நாங்கள் அதிகம் பாவித்தால் அதிகம் கேட்டால் தானே மற்றய புதிய மாதிரிகளிலும் தமிழ் ஆதரவு தருவார்கள். நானும் ஒரு தமிழ் ஆதரவு நொக்கியாவைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் :)

நொக்கியா 2730 பிடித்துவிடவே அது பற்றிய உதவிக் குறிப்புகளை ஒரு வலைப்பதிவில் எழுத தொடங்கியுள்ளேன். நீங்கள் அந்த தொலைபேசி பாவிப்பவரானால் நீங்களும் சென்று படித்துப் பயனுறுங்கள்.

இந்த வலைப்பதிவை நீங்கள் உங்கள் செல்பேசியில் காண இந்த முகவரிக்குச் செல்லுங்கள்.

நொக்கியாவில் எவ்வாறு தமிழில் தட்டசிடுவது என்று கேட்க பில்ட்டப்பு கொடுத்த மு.மயூரனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் ;)

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! ;)

PayPal ஐ தடை செய்த இந்தியா

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் முறையும் இதுதான் என்று கூறினால் மிகையாகாது.

இந்த தடைமூலம் இணையத்தில் பேபால் பாவிக்கும் இந்தியர்கள் பெரும் பிரைச்சனைகளை அடையப் போகின்றனர். இலங்கை போன்ற நாடுகளில் பேபால் முழுமையான சேவையை வழங்கவில்லை. இலங்கை பேபால் பயனர்கள் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியுண்டு ஆனால் அங்கிருந்து பேபால் பணத்தை பெறும் வசதியில்லை. ஆயினும் இருபக்க கொடுக்கல் வாங்கல் வசதி இந்திய பேபால் பயனர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்படித் தக்கதாகும்.

எது எவ்வாறிகினும் பேபால் தம்மை பதிவு செய்துகொண்டால் மீள இந்தியாவில் இயங்கலாம் என்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz என்றால் என்ன?

கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.

உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.

இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.

மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்

எனக்கு இன்னும் Buzz இல்லையே??

நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.

மயூரேசனை Google Buzz இல் பின் தொடர

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

16 வயதே நிரம்பிய Twitter புலி

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.

இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.

OMGFacts இலச்சினை

16 வயது தம்பி போட்ட சில ட்விட்டர் சாம்பிள்களைக் கீழே பாருங்கள்

All swans in England are the property of the queen or king.

In 1770, a bill proposing that women using makeup should be punished for witchcraft was put forward to the British Parliament.

Orgies were originally religious events. They were originally offerings to the gods.

இவன் எழுதிய சில தனி நபர்கள் பற்றிய ட்விட்கள் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

ABC செய்திகளில் இது பற்றிய செய்தி.