Feed on
Posts
Comments

Your Ad Here

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அவரைச்சுற்றிய ஆண்களையும் பற்றியதாக அமைந்துவிட்டது. இன்னுமொரு நூற்றாண்டுக்கு அவை மாறப்போவதில்லை. அவற்றை மாற்றச்சொல்லிக் கேட்டு தாய்குலத்தில் சாபத்திற்கு ஆளாக எனக்கு விருப்பமில்லை.

இந்த செப்டம்பர் மாதத்தில் எனக்கு விருப்பமான மூன்று ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள் ஆரம்பிக்கின்றன அல்லது ஆரம்பித்துவிட்டன. இவை பற்றிய சுருக்கமான என் கருத்துக்களைத் தொடர்ந்து படியுங்கள்.

1. Prison Break

சாதாரண சிறையுடைப்புக்கதை என்று நினைத்துவிடாதீர்கள். மண்டையைக் காயப்போட்டுப் பார்க்குமளவிற்கு விறுவிறுப்பானதும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டதும்தான் இந்த தொலைக்காட்சித் தொடர். லிங்கன் பரோ எனும் அப்பாவி மனிதனை ஒரு கும்பல் பொய் சாட்சிகள் மூலம் சிறைக்கு அனுப்புகின்றது. லிங்கன் பரோவின் தம்பி மைக்கல் ஸ்கோபீல்ட், அண்ணாவைக் காப்பாற்ற திட்டம் தீட்டுவதே கதை.

சிறையை உடைக்க சிறைக்குள் புகுந்தாக வேண்டும், ஆகவே தான் வங்கியில் கொள்ளையடிப்பது போல ஒரு நாடகமாடி அண்ணா இருக்கும் அதே சிறைச்சாலைக்குச் செல்கின்றான். அங்கிருந்து தானும் தன் அண்ணனும் தப்புவதற்கு வழிகளைச் சமைக்கின்றான். இதில் விருப்பத்துடனும், விருப்பமில்லாமலும் பல நபர்கள் சேர்ந்து கொள்கின்றனர். பாகம் ஒன்றில் சிறைச்சாலையை உடைத்து இவர்கள் தப்புகின்றனர்.

பாகம் இரண்டில் சிறைச்சாலைக்கு வெளியே இவர்கள் தப்பி வாழுவதற்கு செய்யும் முயற்சிகள் பற்றியது. இவர்களை விடாமல் துரத்தும் அரசு ஒரு பக்கம், இவர்களை கொல்லத்துடிக்கும் கம்பனி எனும் கும்பல் மறுபக்கம் என இவர்களுக்கு இரு முனைத்தாக்குதல். இவற்றில் இருந்து எவ்வாறு தப்புகின்றனர் என்பதுதான் பாகம் இரண்டு.

பாகம் மூன்று பனாமாவில் உள்ள சொனா எனும் சிறைச்சாலையில் நடக்கின்றது. சட்டம் எதுவும் ஒழுங்காக இல்லாத சிறைச்சாலையில் மாட்டும் மைக்கல் ஸ்கோபீல்ட் அங்கிருந்து தப்ப முயற்சிப்பது பாகம் மூன்று.

பாகம் நான்கு இப்போது ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டதி. எம்மைபோல இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் உள்ளோர் டொரன்ட் மூலம் இறக்கிப்பார்க்க வேண்டியதுதான். நான்காம் பாகம் மீள அமெரிக்காவில் நடக்கின்றது. கயவர் கும்பலான கம்பனி எனும் நிறுவனத்தில் இரகசிய தகவல்கள் அடங்கிய வட்டை மீட்டு எடுத்து அரசிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு மைக்கலின் குழுவினருக்கு வந்து சேர்கின்றது. இதை உத்தியோக பூர்வமற்ற முறையில் இவர்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம். இதை செய்து முடிப்பார்களா அல்லது செய்து முடிக்காமல் சிறை செல்வார்களா என்பதை இனி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டியதுதான்.

2. Sarah Connor Chronicles – Terminator


டேர்மினேட்டர் திரைப்படத்தைப் பற்றித் தெரியாதவர்கள் இவ்வையகத்தில் இருக்க முடியாது. ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகருக்கு புகழ்வாங்கிக் கொடுத்த்துடன் உலகறியச்செய்ததும் இந்த திரைப்படம்தான். கதை என்னவென்றால் எதிர்காலத்தில் உலகை இயந்திரங்கள் ஆக்கிரமிக்கின்றன. மனிதனை அவை அழித்தொழிக்கின்றன. அவற்றை எதிர்த்து மனிதர்கள் போராடுகின்றார்கள். இவ்வாறு போராடும் மனிதர்களின் தலைவர் ஜோன் கோனர். ஜோன் கோனரை அழிக்க முடியாத இயந்திரங்கள், ஜோன் கோனர் பிறக்க முன்னரே அவனது தாயாரைக் கொல்லத் திட்டமிட்டு பழைய காலத்துக்கு ஒரு இயந்திரத்தை அனுப்புகின்றனர். அந்த இயந்திரம் தன் தாயாரை கொல்லாமல் இருக்க ஒரு வீரனை ஜோன் கானரும் பழைய காலத்துக்கு (அதாவது எங்கள் நிகழ்காலம்) அனுப்பிவைக்கின்றார். இதில் யார் வென்றார் யார் தோற்றார் என்பதே பாகம் ஒன்று.

பாகம் இரண்டில் ஜோன் கோனர் சிறு பையனாக இருக்கும் போது மீண்டும் அவனை அழிக்க ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. அந்த இயந்திரத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்ற ஜோன் கோனர் தான் ஒரு இயந்திரத்தை மீள் நிரலிட்டு அனுப்புகின்றான். இதில் எந்த இயந்திரம் வென்றது எந்த இயந்திரம் தோற்றது, ஜோன் கோனர் தப்பினாரா வென்றாரா என்பது மிகுதிக் கதை.

2ம் திரைப்படத்துக்கு பின்னர் 3ம் திரைப்படத்துக்கு முன்னர் நடப்பதாகவே இந்தத் தொலைக்காட்டசித் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த உலகை தம் கட்டுப்பாட்டுக்குள் இயந்திரங்கள் எடுக்கும் நாள் (Judgment Day) நெருங்காமல் இருக்க ஜோன் கானரும் இவர் தாயாரும் எடுக்கும் முயற்சிகள் பற்றியதே இந்த தொடர். இங்கும் வழமை போல எதிர்காலத்தில் இருந்து இயந்திர மனிதர்கள் வருகின்றார்கள். ஜோன் கானரைக் கொலைசெய்ய முயற்சிக்கின்றார்கள் ஆயினும் அவர்களிடம் இருந்து காப்பாற்ற கொமோடி எனும் இயந்திர மனுசி வருகின்றார்.

உலகின் எதிர்காலத்தை மாற்ற இவர்கள் போராடுவதுதான் இந்தக் கதை. இப்போது இந்த தொடரும் அமெரிக்காவில் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. இரண்டாம் பாகம் ஆரம்பித்து அதில் இரண்டு அத்தியாயங்களும் முடிவடைந்துவிட்டது.

பி.கு: திரைப்படம் 4ம் பாகம் 2009 ஜூலையில் வெளிவர உள்ளது.

3. Heroes


இது மனிதனின் கூர்ப்பியலை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித்தொடர். மொஹிந்தர் சுரேஷ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையாளர். இவரின் தந்தை மரபியலில் ஆர்வம் கொண்டு அமெரிக்கா சென்று பல ஆராய்ச்சிகள் செய்கின்றார். இவ்வாறு ஆராய்ச்சி செய்வதன் மூலம் கூர்ப்பின் மூலம் விஷேட திறமைகள் கொண்ட மனிதர்களை இனம் காண்கின்றார். இவர் திடீரென ஒருநாள் கொலை செய்யப்படுகின்றார்.

தந்தையார் கொலையுண்ட காரணத்தை அறிய சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லு சுரேஷ் அங்கு விஷேட திறமைகொண்ட பல மனிதரைக் காண்பதுடன் தன் தந்தையின் கனவுப் பயனத்தைத் தொடர்கின்றார். சுரேஷாக நடிப்பவர் செந்தில் ராமமூர்த்தி எனும் தமிழன். நம்மவர்கள் பெருமை பட வேண்டிய விசயம்தான். இதில் பயங்கர கடி என்னவென்றால், சென்னையும், சென்னைப் பல்கலைக்கழகமும் காட்டப்படும் போது சென்னை ஏதோ ஹிந்தி ஊர் போன்று காட்டுவார்கள். எங்கும் ஹிந்திப் பெயர்பலகைகள், ஹிந்தி பேசும் மக்கள் என பல பல.

இந்த தொடரில் விஷேட தன்மைகள் கொண்ட பலர் இருந்தாலும் என்னை நன்கு கவர்ந்தது பீட்டர் பெட்ராலி, ஹிரோ நக்கமுரா ஆகிய இரு பாத்திரங்களுமே. ஹிரோ நக்கமுரா ஒரு ஜப்பானியப் பாத்திரம் அத்துடன் அவருக்கு நேரத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை உண்டு. அதாவது எதிர்காலம், பழையகாலம் என்று சுற்றி சுற்றி வருவார். இது போல பல விஷேட சக்தியுள்ள பாத்திரங்கள் இந்த தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதையில் வரும் வில்லன் 2007ம் ஆண்டின் சிறந்த வில்லன் எனும் விருதைப் பெற்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எப்படியான வில்லன் என்று. அருமையான நடிப்பு. சைலார் என்ற பெயருடன் வரும் இவன் மற்றவர்களின் விஷேட சக்திகளைத் திருடுவதில் ஆர்வம் கொண்டவன். இவன் மற்றவர்களைக் கொன்று அவர்கள் மூளையை உண்பதன் மூலம் மற்றவர்களின் சக்தியைப் பெறுவான். இவனை எதிர்க்கும் வலிமை பீட்டர் பெட்ராலிக்கும், ஹிரோ நக்கமுராவிற்குமே உண்டு. மற்றவர்கள் இவனை எதிர்த்து நின்றால் ஒரு நிமிடம் தாக்குப்பிடிப்பதே கஷ்டம்.

இந்த மாதம் இந்த தொடர் 3ம் பாகம் ஆரம்பிக்க உள்ளது. டொரன்ட் மென்பொருளை இதற்கா துடைத்து வைத்துள்ளேன் இறக்க வேண்டியதுதான்.

இதைவிட மேலும் பல தொடர்களைப் பார்ப்பேன், ஆனாலும் மனதில் நச்சென்று நிலைத்து நிற்பது ஏனோ இந்த தொடர்கள் மட்டும்தான்.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் என்று தெரிகின்றது.

பிளாக்கர் வரைவு தமிழில்

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Tamil Google Botஇப்போது ஜிமெயிலில் நேரடியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். கூகிள் இந்தியா இதற்கான வசதியை செய்து வழங்கியுள்ளது. இவ்வாறு அரட்டை அடிப்பதற்கு முதலில் en2ta.translit@bot.talk.google.com எனும் முகவரியை உங்கள் தொடர்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு அரட்டை அடிக்க விருப்பமான நண்பரை அரட்டைக்கு அழையுங்கள். பின்னர் அந்த அரட்டையை குழு அரட்டை ஆக்குங்கள். அந்த குழு அரட்டைக்கு en2ta.translit@bot.talk.google.com ஐயும் அழையுங்கள். இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சிட தட்டச்சிட தமிழில் இந்த பாட் உங்களுக்கு மாற்றிக்காட்டும்.

இதில் இருக்கிற பிரைச்சனை என்ன வென்றால் இரண்டு தடவை நாங்கள் தட்டச்சிடுவது மீள மீள வருது. உதாரணமாக நான் amma என்று தட்டச்சிட்டா அங்கே amma, அம்மா இரண்டையும் காட்டுது. இதை விரைவில் திருத்துவார்கள் என்று நம்புவோம்.

கலக்குங்க….

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,

orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.

எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று புரிந்து கொண்டோம். இது தவறு என்று நீங்கள் கருதினால், கூடுதல் விவரங்களுடன் உங்கள் புகாரை மீண்டும் சமர்ப்பிக்கவும். இதனால் எங்களுடைய ஆதரவு குழு இந்த உள்ளடக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

orkut இல் முறைகேடுகள் பற்றிய எங்கள் கொள்கைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்பைக் காணவும்.
http://help.orkut.com/support/bin/answer.py?answer=16198&hl=ta

மதிப்பாய்வு செய்யப்பட்ட உள்ளடக்கம்: “தமிழ்மன்றம்”

என்ன கொடுமை சார்? என் புகைப்படத்தை மற்றவர் பயன்படுத்துவது ஓர்கூட் கொள்கையா? சரி அதைவிடுங்க என் புகாருக்கு பதில் அளிக்க ஒரு வருடமாச்சா? வாழ்க கூகிள் வாழ்க ஓர்குட்.

இதைவிட வினோதமான நிகழ்வு ஓன்று பேஸ்புக்கில் நடந்தது. சமூக வலைப்பின்னல் தளங்களில் தேவையில்லாமல் எங்கள் படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிராமல் விடுவதே நன்று.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா???

லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து ரொபினின் தந்தை தன் மகனைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை நீக்கின்றார். வளர்ந்து வரும் ரொபின் சில நலன் விரும்பிகளுடன் சேர்ந்து நொட்டிங்கம் செரீப்பை எதிர்ப்பதுதான் கதை. கதையில் இங்கிலாந்து அரசன் சிறு பாகத்திற்கு வந்து சென்றாலும் பெரும்பகுதியும் ரொபின், செரீப் இடையான போராட்டத்தை சித்தரிப்பதாகவே இருக்கின்றது.

ரொபினின் கூட்டத்திலே இருக்கும் அங்கத்தவர்களும் ஒவ்வொரு பண்பு கொண்டவர்கள். லிட்டில் ஜோன் பலசாலியும் எதையும் தூக்கியடிக்க கூடியவருமானவர். மாச் ரொபினின் உடன் பிறவா சகோதரன் கூட்டத்தில் சிறய பையன் ரொபினின் காதலியின் அன்புக்கு உரியவன். டக் என்பவர் ஒரு முந்தைய பாதிரியார் பிந்தைய போராளி அடுத்து வில் இவன் அளவுக்கதிகமாக கோவப்படக் கூடியவன். தற்போது பல ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்து வருகின்றான். அண்மையில் வெளிவந்த BEOWULF என்ற திரைப்பட நாயகனுக்கு இவர்தான் உருவ அசைவு கொடுத்தார்.

கடைசியாக நசீர். அரபு தேசத்தை சேர்ந்த இஸ்லாமியன். சிலுவை யுத்தம் நடந்த காலத்தில் நடந்த கதையாக சித்தரிப்பதால் பலஸ்தீனத்துக்கு சண்டையிடச் செல்வதைப் பற்றி பல பேச்சுக்கள் கதையிடையிடையே வரும். இரட்டை வாள் கொண்டு அவன் போடும் சண்டையை இரசிப்பதே தனி சுகம். மரியன் எனும் ரொபினில் காதலியை மந்திர வாதி ஒருத்தனில் கோட்டையில் இருந்த காப்பாற்றிக் கூட்டிக் கொண்டு ஓடும் போது இடை மறித்து நசீர் போடும் சண்டை இன்றும் கண் முன்னே. கறுப்பு உடையில் வரும் நசீர் மிடுக்காக வாள்வீசுவதைப் பார்த்து வீட்டில் இருக்கும் பாண் வெட்டும் கத்தியையும், மீன் வெட்டும் கத்தியையும் ஒன்றாக தூக்கிப் பிடித்து சுத்திய காலங்களை நினைத்துப் பார்க்கின்றேன்.

இதைவிட செரீப், இரக்கமில்லாத ஒரு அடக்குமுறை செய்பவன் அவனுக்கு ஒரு தளபதி கிஸ்பன். செரீப்பின் கெட்டித்தனத்திற்கு மறுபக்கமாக இருக்கும் அடி முட்டாள். முட்டாள் வேலை பார்த்து பலதடவை ரொபினிடம் அடி படுவான். எத்தனையோ தடவை ரொபின் கிஸ்பனை உயிருடன் பிடித்தாலும் ஏன் பின்னர் உயிருடன் விட்டுவிடுகின்றானோ தெரியாது.

பாடசாலையில் (இரண்டாம் ஆண்டு ??) படிக்கும் போது தொலைக்காட்சியில் மறக்காமல் பார்ப்போம். வீட்டில் எல்லாரும் இருந்து பார்க்கும் தொலைக்காட்சித் தொடர். என்னதான் தமிழ் மெகா தொடரை வீட்டில் இருந்து குடும்பமாக கும்மியடித்துப் பார்த்தாலும் இப்படியான தொடர்களை குடும்பத்தோடு இருந்து பார்ப்பதே தனி சுகம்தான்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களிலும் ஒரு ஹீரோவும் அடுத்த பாகங்களில் வேறு ஒரு ஹீரோவும் வருவார். முதல் பாகத்தில் வரும் ஹீரோ இறந்து போய் அடுத்த ஹீரோ வருவார். ஆனால் எங்கள் பள்ளியில் நடந்த பேச்சின் படி முதல் பாகத்தில் நடித்த ஹீரோ நிசத்திலேயே இறந்துவிட்டதால் இந்த இரண்டாம் ஹீரோ வந்துள்ளார். ஆனால் நிசத்தில் அவர் இறக்கவும் இல்லை மரணிக்கவும் இல்லை. என்றாலும் IMDB யில் நடிகரின் இன்றைய தோற்றத்தைப் பார்த்தால் ஏமாற்றமாக இருக்கின்றது. எப்படி இருந்தவர் இப்ப இப்படி ஆகிட்டார்.

அண்மையில் நண்பன் டொரன் மூலம் இந்த தொடரை பதிவிறக்கி தந்தான் 2 பாகங்கள் பார்த்து முடித்தாகிவிட்டது. இனி மூன்றாம் பாகத்தைப் பார்க்கத் தொடங்க வேண்டும். மூன்றாம் பாகத்தில் இருந்து அடுத்த ஹீரோ வருகின்றார். அவர் பெயர் ரொபர்ட். செரீப்பின் தளபதி கிஸ்பனுக்கு ஒரு முறையில் சகோதரன்.

Robert of Huntingdon (Jason Connery) and his

மீண்டும் இந்த தொடர் தொடர வாய்ப்பில்லை. கடைசி அத்தியாயம் வெளியாகி இப்போது 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. என்றாலும் என்றும் இனிமையான நினைவுகளை மீட்டுத்தரக் கூடிய இந்த ரொபின் என்றும் என் மனதில் பசுமரத்தாணியாக இருப்பான்.

“ஹேர்ண் புரட்டக்ட் அஸ்”

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

காதலிக்க நேரம் இல்லை எனும் தொடரை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். வழமை போல இந்த தொலைக்காட்சித் தொடரை நான் பார்பதில்லை. ஆனாலும் பலர் இதை விரும்பிப் பார்த்ததைக் கண்டிருக்கின்றேன். ஆனாலும் இப்போது ஒரு முக்கியமான பாத்திரமான நாயகனைக் கொலைசெய்துவிட்டார்களாம். அதனால் தொடர் டோடல் பிளாப் ஆகிவிட்டது.

இந்த தொடரின் இரசிகர்கள் பெண்களாக இருக்கின்ற நேரத்தில் நாயகனை கொலை செய்வது என்பது முட்டாள் தனம்தானே???

இந்த தொடரின் தொடக்கத்தில் வரும் பாடல் மிக அழகானது. பல தடவை மீண்டும் மீண்டும் கேட்டாலும் திகட்டாத பாடல். நீங்களும்தான் கேட்டுப் பாருங்களேன்.

MP3 ஆகப் பதிவிறக்குக

பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்

என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..

I

யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.

வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.

மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே?? ;)

திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…

நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.

இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.

இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.

இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.

இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.

மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.

சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.

மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்……….. என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்… தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.

பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ள settings சென்று Language என்பதில் தமிழ் என்பதைத் தெரிவு செய்யுங்கள்…

கூகிள் வாழ்க… தமிழ் அதனிலும் ஓங்கி வாழ்க.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

200px}}Image via Wikipedia

பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார்.

எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் தண்ணி குடிக்கவில்லை, என்றெல்லாம் சில ஊடகங்கள் இவரை வைதுள்ளன. இதனால் மனமுடைந்த ஜாக்கி இது பற்றி தனது தளத்தில் மனமுருகி எழுதியுள்ளார்.

ஏன்தான் நம் ஊர் காரங்களுக்கு இந்த கோணல் புத்தியோ?

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Older Posts »