தசாவதாரம் (2008) விமர்சனம்
Jun 15th, 2008 by மயூரேசன்
ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.
வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.
எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.
மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே??
திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…
நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.
இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.
இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.
இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.
இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.
மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.
சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.
மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.
Enjoyed my post.. then buy me a cofeeIf you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!